பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி 20, 2001

Subramaniya Bharathi

திேய கீதங்கள்

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம் ;

பாமரராய், விலங்குகளாய். உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும். (1)

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,

வள்ளூவர் போல், இளங்கோவைப்போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம்;ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்


தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! (2)

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். (3)

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்

வாக்கினிலே ஒளியுண் டாகும்;

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவு மாயின்,

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்;

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார். (4)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+