For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
சோமதேவன் புகழ்
பல்லவி
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயிமிக்க அசு ரரின் மாயையைச் சுட்டாய்,
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர் நீங்கி யென்னுனஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரன்போற்
பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய். (ஜய)
(தொடரும்)
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]