ஈரோடு தமிழன்பனுக்கு சிற்பி இலக்கிய விருதுகோவை:
2004-ம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்படுகிறது.
சிற்பி அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் இதுதொடர்பாக கூறியதாவது:
"இரவுப்பாடகன் என்ற கவிதை நூலுக்காகவும், சிறப்பான கவிதைப் பங்களிப்புக்காகவும் கவிஞர் ஈரோடுதமிழன்பனுக்கு இவ் விருது அளிக்கப்படுகிறது. இவ் விருதுடன் ரூ.15,0000 பரிசுத் தொகையும், சான்றிதழும்வழங்கப்படும்.
இதற்கு முன் இந்த விருதை கவிஞர்கள் அப்துல் ரகுமான், சி.மணி, தேவதேவன், புவியரசு, பாலா, கல்யாண்ஜி,தமிழ்நாடன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
"எஞ்சோட்டுப் பெண் நூலின் ஆசிரியர் கவிஞர் தமிழச்சி, "நெருப்பில் காய்ச்சிய பாறை நூலின் ஆசிரியர்அன்பாதவன் ஆகியோருக்கு ரூ. 5,000 மதிப்புள்ள சிற்பி இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.
பரிசுக்குரியவர்களை கவிஞர் இரணியன், தமிழோசை பதிப்பக நிறுவனர் கண.குறிஞ்சி, பேராசிரியர் சாந்தாபழனிசாமி ஆகியோர் தேர்வு செய்தனர். இந்த விருதுகள் சிற்பி அறக்கட்டளையும், பொள்ளாச்சி இலக்கியகழகமும் இணைந்து ஆகஸ்ட் 7-ம் தேதி நடத்தும் விழாவில் வழங்கப்படும் என்று கூறினார்.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.