ஒசூரில் விவரணப் படவிழா
செப்டம்பர் 10, 2004
ஒசூரில் விவரணப் படவிழா
ஒசூரில் நாளையும், நாளை மறுநாளும் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி சார்பில் விவரணப் பட விழா நடக்கிறது.
மாநகரங்களில் மட்டுமே திரையிடப்பட்டு வந்த விவரணப் படங்கள் (documentary films) தற்போது சிறுநகரங்களிலும் அவ்வப்போது திரையிடப்பட்டு வருகின்றன. நகர்வாழ் மக்களுக்கு ஏதேனும் ஒரு வழியில்நல்லதைச் செய்வதிலும், நல்லவனவற்றை அறிமுகப்படுத்திவதிலும் சமூல நல அமைப்புகள் முன்னிலும் தீவிரமாகஇப்போது இயங்குகின்றன.
அத்தகைய அமைப்புகளில் ஒன்றாக விளங்கி வரும் ஒசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி, ஹிமால் அசோசியேசன்,நேபாளம் அமைப்புடன் இணைந்து ஒசூரில் விவரணப் படவிழாவை நடத்துகிறது.
ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்களின் 15 விவரணப் படங்கள்திரையிடப்படவிருக்கின்றன.
நாளையும் நாளை மறுநாளும் மொத்தம் 13 மணி நேரம் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன. உயிரினங்கள்வாழ இயற்கை பக்குவப்படுத்திக் கொடுத்திருக்கும் இப் பூமியை தனக்கேயானதாக ஆக்கிரமிக்கத் தொடங்கியமனிதன் நாளடைவில் தனது சுயநலத்திற்காக சக மனிதனையும் நசுக்கும் அவலத்தை வலிபீற விவரிக்கின்றன இப்படங்கள்.
விழாவினை இந்தியத் திரைப்பட சங்கங்கள் கூட்டமைப்பின் தென்மண்டலத் துணைத் தலைவர் நரஹரிராவ்துவக்கி வைக்கிறார். கூட்டமைப்பின் தென்மண்டலச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார்.
பிரபல திரை விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி விழாவை உடனிருந்து நெறிப்படுத்தவும், உரையாடவும்செய்கிறார்.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.