மானமும் அறிவும் தமிழர்க்கு அழகு
கடந்த 11ம் தேதி தெருவெங்கும் பெண்களின் கூட்டம். குறிப்பாக நகைக் கடைகளில் மிகப்பெரும் நெரிசல். சென்னையில் சிலநகைக்கடைகள் காலை 5 மணிக்கே திறந்து விட்டார்களாம்.
அப்படி என்ன அந்த நாளுக்குச் சிறப்பு? முண்டியடித்துக் கொண்டு நகை வாங்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் எல்லோரும் ஒரேஇரவில் பெரும் செல்வந்தர்களாகி விட்டார்களா என்ன?
குழப்பத்துடன் விழிப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் விடை சொல்கிறார்கள், இன்று அக்சய திதியை. அப்படியென்றால்...?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியொரு சொல் இருப்பதே எவருக்கும் தெரியாது. நகைக்கடைக் காரர்களின்கண்டுபிடிப்பாக இது இருக்கலாம்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திதியையாம். திருமாலின் அவதாரம்பரசுராமன் இந்த நாளில் தான் பிறந்தாராம். இந்த நாளில் நகை வாங்கினால் வீட்டிற்குச் செல்வம் வந்து குவியுமாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிவிடப்பட்ட கதை இன்று தழைத்துச் செழித்து வளர்ந்திருக்கிறது. மூடநம்பிக்கையால்உந்தப்பட்டு எல்லோரும் நகைக்கடை நோக்கி ஓடுகின்றனர்.
இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன், உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால்புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயமானது.
எத்தனை பெரியார் தோன்றினாலும் நம் மக்களின் மூடநம்பிக்கைகளை மாற்ற முடியாதோ என்னும் அளவிற்கு அச்சம் பரவுகிறது.
சென்ற ஆண்டு இதே அக்சய திதியையில் நகை வாங்கியவர்கள் வீடுகளுக்கெல்லாம் செல்வம் வந்து குவிந்து விட்டதா? இந்தஆண்டு நாட்டில் வறுமையே இல்லையா? மக்கள் நகை வாங்கினால், நகைக் கடைக்காரருக்குத் தான் செல்வம் வந்து குவியும்.
எந்தப் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லாமல், யார் எது கூறினாலும் அதை நம்பிக் கொண்டு ஒரே திசையில் மந்தைகளாகஓடிக்கொண்டிருந்தால் மக்கள் வளம் பெறுவது எப்படி?
தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களில் ஒரு சாரார் இறை நம்பிக்கை உடையவர்களாக இருக்கக் கூடும். ஆனால் எவரும்மூடநம்பிக்கை உடையவராக இருக்க முடியாது: இருக்கவும் கூடாது. எனவே தமிழ் மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானகருத்துப் பரவலைச் செய்ய வேண்டியதும் நம் கடமையாகவே உள்ளது.
மானமும் அறிவும் தான் மனிதருக்கு மட்டுமன்று, ஒரு சமூகத்திற்கும் அழகு. அறிவார்ந்த தமிழ்ச் சமூகமே நம்முடைய எதிர்காலஇலக்காக இருக்க வேண்டும்.
- தென் செய்தி தலையங்கம்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications