திருக்குறள் பேரவை செயலருக்கு விருது
கரூர் மாவட்ட திருக்குறள் பேரவைச் செயலர் மேலை. பழனியப்பனுக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் செய்த ஆன்மீக, சமுதாய நல மேம்பாட்டுப் பணிகளுக்காக இவ்விருது, திருச்சியில் நடைபெற்ற நகரத்தார் பண்முக வளர்ச்சி மாநாட்டில் வழங்கப்பட்டது.
விருதை, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரு. லெட்சுமணன் வழங்கினார். மத்திய அமைச்சர் ரகுபதி, குன்றக்குடி அடிகளார், மதுரை தமிழிசை மன்றத் தலைவர் சேக்கப்பன், திருநெல்வேலி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருது பெற்ற மேலை. பழனியப்பனை, அருள்மிகு கல்யாண பசுபதீசுவரர் கோயில் அறங்காவலர் குழுவினர், தமிழைச் சங்கத்தினர் க.பா. பாலசுப்பிரமணியன், திருவிக மன்றம் அருணா பொன்னுசாமி,
தமிழ்ச்சங்கம் கன்னல், கடவூர் மணிமாறன், நன்செய்புகழூர் அழகரசன், ஆன்மிக மன்றத் தலைவர் கந்தசாமி, ஐயப்பா சேவா சங்க நிர்வாகி சிவசங்கர், மெஜஸ்டிக் அரிமா சங்க சாசனத் தலைவர் எம். செல்வராஜ், கரூர் நகராட்சிப்பள்ளித் தலைமையாசியர் குமாரசாமி உள்ளிட்டோர் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications