12 பேருக்கு கலைச் செம்மல் விருது

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கவின் கலைகளான ஓவியம், சிற்பம், பதிப்போவியம் ஆகிய கலைகளை வளர்க்கவும், பாதுகாக்கவும், பரப்பவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள படைப்பாளிகளை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு மூலம் 2002ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு மரபு வழி மற்றும் புதுப்பாணி கலைப் பிரிவுகளை சார்ந்த புகழ் பெற்ற 12 ஓவிய, சிற்பக் கலை வல்லுநர்களுக்கு கலைச் செம்மல் விருது வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
விரைவில் முதல்வர் கருணாநிதி கையால் இந்த விருதுகள் வழங்கப்படும்.
விருது பெற்றோர் விவரம்:
மரபு வழிக் கலை வல்லுநர்கள்
ம.க.கிருஷ்ணன் (2002-03)
எம்.ஜி.நாகராஜ் ஸ்தபதி (2003-04)
ரகுநாதன் (2004-05)
எம்.துரைராஜ் (2005-06)
வே. ஜெகந்நாதன் (2006-07)
ஏ.எசு. நடராஜன் (2007-08)
புதுப்பாணி பிரிவு வல்லுநர்கள்
அ.அல்போன்சா (2002-03)
எம்.சேனாதிபதி (2003-04)
ஜி.ராமன் (2004-05)
எல்.மோகன் கல்யாணி (2005-06)
கே.சி.நாகராஜன் (2006-07)
வி.ராஜேந்திரன் (2007-08)











Click it and Unblock the Notifications