துபாய்: தென்றல்-2ம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil

வளைகுடா வாழ் தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி மாதம் ஒரு முறை வெளியாகிறது தென்றல் இதழ்.
எம்ஜேஆர் இதன் ஆசிரியராக உள்ளார். இந்த இதழின் 2ம் ஆண்டு விழா அபுதாபியில் நடந்தது. அபுதாபி பொறியாளர் சங்க தொழில் வளர்ச்சி ஆலோசகரான டி.நடராஜன் தென்றலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். எம்ஜேஆர், பாண்டி புரோஸ் பிரதியை வழங்கினர்.
அபுதாபியில் உள்ள தென்றல் நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகள் இப்ராகிம் செய்தார். ஹாங்காங் உலகத் தமிழ் பண்பாட்டு கழக தலைவர் ரபீ உத்தின் வாழ்த்து செய்தி அனுப்பினார்.












Click it and Unblock the Notifications