For Daily Alerts
Just In
'விருதுநகர் மாவட்ட சாலியர் வாழ்வியல்' நூல் வெளியீடு
அருப்புக்கோட்டை: 'விருதுநகர் மாவட்ட சாலியர் வாழ்வியல்' என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழா அருப்புக்கோட்டையில் நடந்தது. தொழிலதிபர் ஆனந்தன் தலைமை வகித்தார். தன்னம்பிக்கை வாசகர் வட்டத் தலைவர் நாகராஜன், சாலியர் நர்சரி பள்ளிச் செயலர் திருவண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அருப்புக்கோட்டை ராஜபாண்டி எழுதிய "விருதுநகர் மாவட்ட சாலியர் வாழ்வியல்' என்ற நூலை புளியம்பட்டி, திருநகரம் சாலியர் உறவின்முறை தலைவர் சுப்பிரமணியம் வெளியிட, ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.
நூலகர் சுப்பிரமணியம், கம்பன் கழகச் செயலர் கவிஞர் காசி, தமிழ் ஆசிரியர் கணேசன் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். ராஜபாண்டி ஏற்புரை நிகழ்த்தினார்.
Comments
Story first published: Tuesday, September 23, 2008, 12:02 [IST]