இரவிலும் இனி தாஜ்மஹாலை ரசிக்கலாம்!
Subscribe to Oneindia Tamil

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரவிலும் கூட தாஜ்மஹாலை பார்க்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அதன் பின்னர் இரவில் தாஜ் மஹாலைப் பார்க்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இரவிலும் தாஜ் மஹாலைப் பார்க்க அனுமதிக்க கோரி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாதத்திற்கு நான்கு முறை மட்டும் இரவு நேரத்திலும் தாஜ் மஹாலைப் பார்க்க அனுமதிக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.
ஒரு இரவு 400 பேர் வரை அனுமதிக்கலாம் எனவும் ஆக்ரா மாவட்ட நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications