சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்கியது

ஆண்டுதோறும் தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாளன்று மாலை போட்டு விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்வது பக்தர்களின் வழக்கம்.
இந்த ஆண்டு ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளது. நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளன.
தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெறும். அதன்பிறகு கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உச்சிகால பூஜையும் தொடர்ந்து மாலை புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி செல்லும் பக்தர்கள் இன்று முதல் மாலையணிந்து தங்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் குருசாமிகள் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கின்ற நிகழ்ச்சிகள் இன்று நடக்கின்றது. மேலும் நெல்லை குறுக்குதுறை, குற்றாலம் அருவிக்கரைகள் உள்பட பல்வேறு இடங்களில் மாலை அணியும் வைபவங்கள் நடைபெறுகிறது.
இதனையொட்டி கடைகளில் ஐயப்ப பக்தர்கள் அணியும் மாலைகள் விற்பனையும் சூடி பிடித்துள்ளது. சந்தனம், துளசி மணிமாலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு கோயில்களிலும் மண்டல பூஜைகள் இன்று துவங்குகின்றன.












Click it and Unblock the Notifications