'ஸ்டைலான அரசியல்வாதிகள்' ராகுல், ஹேமாமாலினி!

இந்திய அரசியலுக்கும், வசிகரமானவர்களுக்கும் அதிக தொடர்பு உள்ளது. மக்களிடமும் இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதனால் தான் நடிகர், நடிகைகளுக்கு அரசியலில் ஒவ்வொரு கட்சியிலும் அறிவிக்கப்படாத தனி இடஒதுக்கிடே உண்டு என சொல்லும் அளவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சண்டீகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று நாடு முழுவதும் உள்ள 156 பேஷன் டெக்னாலஜி கல்லூரிகளில் பயிலும் 14 ஆயிரம் மாணவ, மாணவிகளிடம் கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. அவர்களிடம் தற்போதிருக்கும் அரசியல்வாதிகளில் வசிகரமான ஆண் அரசியல்வாதி யார், பெண் அரசியல்வாதி யார் என கேள்வி கேட்கப்பட்டது.
அந்த கருத்து கணிப்பின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில்,
இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 90 சதம் பேர் பெண்கள். ஆண்கள் அரசியல்வாதிகளில் வசிகரமானவர் என்ற பெருமையை ராகுல் காந்தி பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக 50 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது இடத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக எம்.பி.யுமான சித்து பெற்றுள்ளார். அவருக்கு 20 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இவர்களை தவிர்த்து காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவுக்கு 11 சதவீதம் பேரும், காங்கிரஸ் எம்பிக்கள் சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்தய சிந்தியா ஆகியோருக்கு தலா 9 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
பட்டு புடவையில் அசத்தும் ஹேமாமாலினி...
பெண்கள் பிரிவில் கவர்ச்சியான அரசியல்வாதியாக ஹேமாமாலினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரசாரத்தின் போது அவர் அணிந்து வரும் அடர்த்தியான நிறம் கொண்ட காஞ்சிபுரம் பட்டு புடவை தங்களுக்கு ரொம்ப பிடித்திருப்பதாக அவர்கள் கருத்து கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹேமாமாலினிக்கு 47 சதவீதம் பேரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 31 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். நடிகை ஜெயபிரதாவுக்கு 10, முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கு 7 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு 5வது இடம்...
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை 5 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர் என அந்த கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications