For Daily Alerts
Just In
ஜூலை 9ம் தேதி திருவாரூரில் ஆழித் தேரோட்டம்
திருவாரூர்: புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஜூலை 9 -ம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேராட்டம், பங்குனி உத்திரப் பெருவிழாவில் நடத்தப்படும்.
இந்த ஆண்டு தியாகராஜர் சுவாமி பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 13 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழா 23 நாட்கள் பல்வேறு
உற்சவ விழாவாக நடத்தப்பட்டும்.
ஆகம விதிப்படி ஏப்ரல் 5 -ம் தேதி ஆழித் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஆழித் தேரோட்டம் நடப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், திருவாரூர் ஆழித் தேரோட்டம், ஜூலை 9 -ம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments
Story first published: Thursday, June 25, 2009, 14:11 [IST]