குற்றாலத்தில் குளுகுளு சாரல்-களைகட்டுது சீசன்
தென்காசி: குற்றாலத்தில் மீண்டும் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக கண்ணாமூச்சி காட்டி வந்த தென் மேற்கு பருவமழை தற்போது ஜூலை பிறந்தவுடன் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளை குளிர்வித்து வருகிறது.
கடந்த 1ம் தேதி முதல் லேசான வெயிலும், குளுகுளு சாரலும் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.
மேலும், பெரியருவி, புலியருவி, பழையருவி மற்றும் ஐந்தருவி என அனைத்து அருவிகளும் நீர்பெருக்கெடுத்து கொட்டுகிறது.
பெரியருவியில் நீர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து பக்கங்களில் நீர் பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அருவிகளில் நீர் வரத்து நன்றாக இருப்பதால் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதையடு்த்து கடந்த ஒரு மாதமாக வாடியிருந்த வியாபாரிகள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது.