இன்று நெல்கட்டும் செவலில் பூலித்தேவன் 294வது பிறந்த நாள்

நெல்கட்டும்செவல் உள்ளாமூடையார் கோயில் முன் இன்று 4ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை தலைவர் டாக்டர் நடராஜன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் வேலாயுதசாமி வரவேற்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகை மனோரமா, நடிகர் செந்தில், இயக்குனர் மனோஜ்குமார், கவிஞர் சினேகன் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், வாசு, எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக்குமார், தென்காசி எம்பி லிங்கம், கடம்பூர் ஜமீன்தார் ஜெகதிசராஜா, நெல்லை துரைராஜ் பாண்டியன், வரலாற்று ஆய்வாளர் ராஜையா, இருமன்குளம் பழனிச்சாமி, ஓய்வுபெற்ற மாவட்ட மின்கோட்ட பொறியாளர் பாஸ்கரவேலு, வன்னிகோனேந்தல் டாக்டர் சமரசம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளரும், பூலித்தேவன் அறக்கட்டளை உறுப்பினருமான டாக்டர் ஜெய்லானி நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை பூலித்தேவன் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications