பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி நாமக்கல்லில் உண்ணாவிரதம்
நாமக்கல்: தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி தமிழக இலட்சிய குடும்பம் என்ற அமைப்பின் சார்பில் நாமக்கல்லில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் மோகனூர் சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழக இலட்சிய குடும்பம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்துக்கு நாமக்கல் மாவட்ட இலட்சிய குடும்பத்தின் தலைவர் ரமணி ராஜகோபால் தலைமை தாங்கினார்.
காந்தி ஆசிரமம் துணைத் தலைவர் எஸ்.ஆராவமுதன், உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். சிற்பி வேலாயுதம், வழக்கறிஞர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசுகையில்,
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்றால் அதனை அரசே மக்களுக்கு விற்பது அதைவிடக் கேடு. எனவே, இதை அரசு உணர்ந்து மதுவை தடை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications