போர்ட்பிளேரில் விரைவில் திருவள்ளுவர் சிலை திறப்பு

போர்ட் பிளேரில் நான்கு நாள் உலக திருக்குறள் மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி போர்ட் பிளேரில் 6.5 அடி உயரமுடைய திருவள்ளுவர் சிலை திறக்கப்படவுள்ளது.
நவம்பர் 7ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த சிலையை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைக்கவுள்ளார்.
இதுகுறித்து விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி. சந்தோஷம் கூறுகையில், ஒரு மாதத்திற்கு முன்பு நான் போர்ட் பிளேர் போயிருந்தபோது, திருவள்ளுவர் சிலை அமைக்க தங்களுக்கு ஓராண்டுக்கு முன்பே அனுமதி கிடைத்து விட்டதாகவும், சிலையை வழங்கி உதவ வேண்டும் எனவும் அந்தமான் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் சிலையை செய்து அன்பளிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. தற்போது நாகர்கோவிலில் சிலை தயாராகி வருகிறது. முடிந்ததும் போர்ட் பிளேருக்கு அனுப்பி வைக்கப்படும்.
நவம்பர் 7ம் தேதி நடைபெறும் விழாவின்போது இந்த சிலையை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைக்கிறார் என்றார்.
ஹாடோ என்ற இடத்தில் போர்ட் பிளேர் துறைமுகத்திற்கு எதிரே சிலையை நிறுவிக் கொள்ள போர்ட் பிளேர் நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதாம். சென்னை, விசாகப்பட்டனம், கொல்கத்தா ஆகிய நகரங்களிலிருந்து கப்பல் மூலம் வருவோர் இந்த துறைமுகம்தான் நுழைவாயில் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications