இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி நாடும் நெல்லை சிறுவன்
நெல்லை: இருதய அறுவைச் சிகிச்சைக்காக நிதியுதவி நாடி நிற்கிறான் நெல்லை, மேலப்பாளையத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன்.
திருநெல்வேலி, மேலப்பாளையம் ஞானிபீரப்பா நகர் 4 வது தெருவில் வசித்து வரும் எஸ்.எம். செய்யது அஹ்மது அவர்களின் நான்கு வயது மகன் எஸ். அப்துல் வாசிக்கிற்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக இதயம் சம்பந்தப்பட்ட டாக்டர் பரிசோதித்து அதற்கான ஆபரேஷன் மற்றும் மருத்துவ செலவிற்காக ரூ. 50,000க்கு மேல் செல்வாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்யது அஹ்மது மும்பையில் குறைந்த வருவாயில் கூலி வேலை செய்து வருகிறார். அவரது குறைந்த வருமானத்தில் ஆபரேஷன் செய்ய இயலாத நிலையில் உள்ளனர் வாசிக் குடும்பத்தினர்.
எனவே தாராள மனம் படைத்தவர் வாசிக் அறுவைச் சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்கு உதவிட விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரடியாக தங்களது உதவியினைச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏ. எம். செய்யது முஹம்மது
(நல்லாசிரியர்)
எண் 55 பூலி புதுதெரு
மேலப்பாளையம்
தொலைபேசி : 0091 4622 352047
அமீரகத் தொடர்பு எண்:
கான் (ஷால்மியா ஜுவல்லரி) 055 460 3924,
ஹமீது 055 28 46 286