துபாய் தமிழ் பெண்கள் சங்கத்தின் இயல் இசை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் பிப்ரவரி மாத இயல் இசை நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்தியா கிளப்பின் உத்சவ் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக பிருந்தா சுப்ரமணியன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். செயலாளர் மீனாகுமாரி பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தன்முனைப்பு பயிற்சியாளர் கே.எஸ். ராதா கிருஷ்ணன் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கினார்.
லாவண்யா ராவ், சம்வெத் ஈஸ்வர், நந்தகுமார் அஷோக்குமார் ஆகியோர் திருக்குறள் வாசித்து அதன் விளக்கத்தையும் வழங்கினர்.
காயத்ரி சந்திரசேகர் மற்றும் ஷிரிதேவி சிங்காரவேலன் ஆகியோர் இசை விருந்து படைத்தனர்.
விசாலாட்சி சங்கர் நன்றியுரை நிகழ்த்தினர். தமிழ்ப் பெண்கள் சங்கத்தினர் குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.













Click it and Unblock the Notifications