எதை இலவசமாக வழங்க வேண்டும்?-பாடம் கற்றுத் தருகிறது கேரளா
களியக்காவிளை: கேரளாவில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க குறைந்த மின்சாரம் மூலம் அதிகளவில் வெளிச்சம் தரும் சிஎப்எல் பல்புகள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
களியக்காவிளை அருகேயுள்ள கேரள மாநிலப் பகுதியான பாறசாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 4 இடங்களில் பாறசாலை மின்வாரிய அலுவலகம் மூலம் தற்போது சிஎப்எல் பல்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுமக்களிடம் இருந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 60 வாட்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட திறனுள்ள பல்புகளில் இரண்டைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக 20 வாட்ஸ் அளவிலான சிஎப்எல் பல்புகள் இரண்டு இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் கேரளத்தில் நாள் ஒன்றுக்கு பல நூறு மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு பெருமளவு குறையும் என்றும் கேரள மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கேரளத்தின் பல பகுதிகளில் தெருவிளக்குகளில் சூரிய சக்தி விளக்குகளைப் பொருத்தியும் மின் சிக்கனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரக் கிராமங்களிலும், பல்வேறு ஊராட்சிப் பகுதிகளிலும் இந்த சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகளின் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால் பல விளக்குகள் தற்போது இயங்குவதில்லை.
தமிழகத்தில் 2.7 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். ஒரு நாள் மின்தேவை 10,500 மெகாவாட்டாக உள்ளது. ஆனால், தேவையான அளவுக்கு மின் உற்பத்தி இல்லாததால் வரும் கோடையில் கடந்த ஆண்டுகளைப் போல, மேலும் சில மணிநேரம் மின்தடை அதிகரிக்கப்படக்கூடும்.
கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதால், தற்போது அமலில் உள்ள இரண்டு மணி நேர மின்வெட்டு மே மாதம் வரை தொடரும் என மாநில மின்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்பட தமிழக மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, மக்கள் நலனில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது.
ஆனால், குறைந்த அளவு மின்சாரம் மூலம் அதிகளவில் வெளிச்சம் தரும் சிஎப்எல் மின் விளக்குகளை அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கி, மின்சிக்கனத்தில் பிற மாநிலங்களுக்கு கேரள மாநில அரசு வழிகாட்டியுள்ளது.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications