கூத்தாண்டவர் கோவில் திருவிழா -இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி
விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை பந்தலடியில் முக்கிய பிரமுகர்களுக்கு தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழாவில், பல மாநிலங்களில் இருந்தும் அரவாணிகள் வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு, சித்திரை திருவிழாவின் துவக்க நாளான நேற்று கூவாகம், நத்தம், சிவலிங்ககுளம், கொரட்டூர், வாணியங்குப்பம், தொட்டி ஆகிய கிராம மக்கள் மேள, தாளங்கள் முழங்க கூழ் கலயங்களுடன், ஊர்வலமாக வந்தனர்.
கூத்தாண்டவர் கோவில் பின்னால் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக கூடி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தனர். பின்பு பக்தர்கள் எடுத்து வந்த கூழ் ஒன்றாக கலந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில், கோவில் செயல் அலுவலர் பத்ராச்சலம், பூசாரி கூத்தான், ஊராட்சி தலைவர் கூத்தையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் விழாவான இன்று மாலை பந்தலடியில் முக்கிய பிரமுகர்களுக்கு தாலிகட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications