ஈஷா அறக்கட்டளைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் விருது!
கோவை: தமிழகத்தைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளை அமைப்புக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் விருது கிடைத்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடும் தனிநபர்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு இந்திரா காந்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஈஷா அறக்கட்டளைக்கு இந்த ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது.
யோகா கலை நிபுணரும் ஆன்மிக குருவுமான ஜக்கிவாசுதேவை நிறுவனராகக் கொண்ட இந்த நிறுவனம், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்களை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு விருதை வழங்கியுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமையன்று டில்லியில் விஞ்ஞான் பவன் அரங்கில் நடைபெற உள்ளது.
இந் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டு, ஈஷா அறக் கட்டளைக்கு வெள்ளியிலான தாமரை நினைவுப் பரிசும், ஐந்து லட்சம் ரூபாய் பண முடிப்பும் வழங்க உள்ளார்.