தொடர்ந்து 24 மணி நேரம் தவில் வாசித்து சாதனை படைத்த வித்வான்
கரூர்: கர்நாடக இசையில் முக்கியத்துவம் வாய்ந்த கருவியாக இருப்பது தவில். கரூரைச் சேர்ந்த இளம் தவில் வித்வான் ஒருவர் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து 24 மணி நேரம் தவில் வாசித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அமரப்பூண்டி ஏ.கே. ஜெயராஜ் என்பவர். மேடை ஏறிய இவர் தொடர்ந்து 24 மணி நேரம் தங்கு தடையின்றி தவில் வாசித்தார். இவர் தவில் வாசித்து சாதனை மட்டும் படைக்கவில்லை, தனது திறமையையும் அழகுடன் வெளிக்கொணர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியை ஜெயராஜ் கணபதி கீர்த்தனையுடன் தொடங்கினார். பிரபல பாடகர்கள், தேவாரம், நாதஸ்வரம், சாக்ஸபோன், வயலின் மற்றும் வீணை வித்துவான்கள் புடைசூழ தொடர்ந்து இசை மழை பொழிந்தது. கலைத்துறை நடுவர்களும், பொது மக்களும் இந்த நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தனர். பார்வையாளர்கள் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் அவர் திறம்பட வாசித்தார்.
சாதனைகள் பல விதம், அதில் இதுவும் ஒரு விதம்.












Click it and Unblock the Notifications