80-வது பிறந்தநாள்: கவிஞர் வாலிக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை: கவிஞர் வாலியின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதம்:
நீங்கள் மேலும் பல பிறந்த நாட்களைக் காண வேண்டுமென்று இந்த நாளில் உங்களை வாழ்த்துகிறேன். தமிழ் சினிமா பாடல்கள் பரிணாம வளர்ச்சியில் உங்களது பங்களிப்பு மகத்துவமானது. நீங்கள் எழுதிய தமிழ் சினிமா பாடல்களில் பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை. சினிமா ரசிகர்களின் காதுகளில் அவை என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
தமிழ் சினிமா பாடல் வரலாற்றில் உங்களின் அத்தியாயம் மிகப் பெரியது. உங்களுக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பாடல் தொகுப்புகள் வெளியீடு
இதற்கிடையே, வாலியின் பாடல்களை இரண்டு தொகுப்புகளாக வெளியிடும் நிகழ்ச்சி நேற்று சென்னை பிலிம்சேம்பரில் நடந்தது.
பிரம்மகான சபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் புத்தகங்களை நடிகர் கமல் வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், சோ, நல்லி குப்புசாமி செட்டியார், இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகை சரோஜா தேவி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற வாழ்த்தினர்.