கயத்தாறில் நாளை கட்டபொம்மன் நினைவு நாள்: வைகோ பங்கேற்பு
ஓட்டப்பிடாரம்: கயத்தாறில் நாளை கட்டபொம்மன் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 211-வது நினைவு நாள் விழா நாளை மாலை 5 மணிக்கு கயத்தாறில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ. வரதராஜன் தலைமை தாங்குகிறார்.
கட்டபொம்மனின் வாரிசு வீரராஜா, கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை நல்லசாமி, வீரசக்கதேவி ஆலய குழுத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அறக்கட்டளை நிறுவனத் தலைவர் குட்டி வரவேற்கிறார்.
இதில் கலந்து கொண்டு வைகோ சிறப்புரையாற்றுகிறார். விழாவி்ல் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
கோவில்பட்டியில் இருந்து கட்டபொம்மன் நினைவு ஜோதி எடுத்து வரப்படுகிறது. முன்னதாக அன்று மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications