திருச்சியில் இந்து மண மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்த முஸ்லீம்கள்

Subscribe to Oneindia Tamil

Marriage
திருச்சி: திருச்சியில் இந்து மணமக்களுக்கு முஸ்லிம்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

திருச்சி கருமண்டபம் தாஹர் நகரைச் சேர்ந்தவர் ஆடிட்டர் காதர்பாட்சா . இவரது வீட்டில் பணியாற்றுபவர் ஈஸ்வரி. இவர் தனது ஐந்து வயதில் அங்கு வீட்டு வேலைக்கு சேர்ந்தார். அன்று முதல் இன்று வரை அங்கேயே பணியாற்றி வருகின்றார்.

அதேபோல, சேலத்தை சேர்ந்த கட்டிங் மாஸ்டர் நாகேந்திரன் என்பவரை இப்ராகீம் என்பவர் வளர்த்து வந்தார். இந்த நிலையில், ஈஸ்வரிக்கும், நாகேந்திரனுக்கும் திருமணம் செய்ய காதர்பாட்சா, இப்ராகீம் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து, அவர்களுக்கு திருச்சி கருமண்டபத்தில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில், இந்து முறைப்படி காதர்பாட்சா, இப்ராகீம் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்த வித்தியாச திருமணத்தைக் கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் காதர்பாட்சா, இப்ராகீம் குடும்பத்தினரை மனதார வாழ்த்தினர். மணமக்களையும் அட்சதை தூவி ஆசிர்வதித்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+