29-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா தொடக்கம்: 11 நாட்கள் விழா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இத் திருவிழா 29-ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 9-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும்.
கொடியேற்றத்தையொட்டி வரும் 29-ம் தேதி அதிகாலை 1 மணி அளவில் திருக்கோவில் நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறவுள்ளது. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதைத் தொடர்ந்து மற்ற பூஜை காலங்கள் நடைபெற இருக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செப்டம்பர் 2-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேலக்கோவிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. செப்டம்பர் 4-ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோவிலில் கடக லக்கனத்தில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நடைபெறவிருக்கிறது.
அன்று காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முகவிலாச மண்டபத்தில் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தந்த பிறகு பிள்ளையன் கட்டளை மண்டபத்தை அடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கின்றது.
மாலை 4 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகின்றார்.
செப்டம்பர் 5-ம் தேதி அதிகாலை சுவாமி பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
செப்டம்பர் 7-ம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் திருக்கோவில் கலையரங்கில் காலையும், இரவிலும் திருமுறை இன்னிசை, பக்தி சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications