ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
ஆஜ்மீர்: ஆஜ்மீர் தர்காவில் கடந்த 38 நாட்களாக பட்டினியாக இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இவர்களில் இருவர் சிறுவர்கள், பரிதாபமாக உயிரிழந்தவர். காஜா மொய்னுதீனின் கட்டளைப்படி தாங்கள் பட்டினி இருந்து வந்ததாக இவர்கள் முன்பு கூறியிருந்தனர். மேலும் 10 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மூவருமே அலகாபாத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்கள் முகம்மது சலம் (14), நெளசர் (17), கெய்சர் (28) என்று தெரிய வந்துள்ளது.
தங்களது குடும்பத்தைப் பீடித்துள்ள சாத்தானிடமிருந்து விடுபடுவதற்காக காஜாவின் உத்தரவுப்படி தாங்கள் பட்டினி கிடக்கப் போவதாக 40 நாட்கள் இருக்கப் போவதாக கூறி, தர்கா வளாகத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
38 நாட்கள் கடந்த நிலையில் 3 பேரின் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தற்போது 2 சிறார்கள் உள்பட மேலும் 10 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத் தலைவர் முகம்மது முஸ்தபா (59) இதுகுறித்துக்கூறுகையில்,எங்களைப் பிடித்துள்ள சாத்தானிடமிருந்து விடுபடவும், எங்களுக்கு வைக்கப்பட்ட செய்வினையிலிருந்து விடுபடவும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல எனது சகோதரர் தனது குடும்பத்தினருடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்புசெய்தார். நானும் அப்போது உண்ணாவிரதம் இருந்தேன் என்றார்.
முஸ்தபா ஓய்வு பெற்ற மெர்ச்சன்ட் நேவி அதிகாரி ஆவார். முஸ்தபா கனவில் ஆஜ்மீர் காஜா வந்து உண்ணாவிரதம் இருக்குமாறு கூறியதாகவும், அதையடுத்தே குடும்பத்தோடு அனைவரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் உண்ணாவிரதம் முடிய 2 நாட்களே உள்ள நிலையில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருப்பது முஸ்தபாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications