தமிழகத்தில் சமூக சேவை ஆற்றிய ஸ்வீடன் நாட்டவருக்கு பிர்லா விருது
டெல்லி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக சேவை ஆற்றியதற்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்சி பர்னேவிக்குக்கு ஜி.டி. பிர்லா சர்வதேச விருது வழங்கப்பட்டது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி இந்த விருதை வழங்கினார்.
இந்த விருதுகளை பிர்லா கலை மற்றும் கலாசார அகாடெமி மறைந்த கன்ஷியாம் தாஸ் பிர்லா நினைவாக வழங்கி வருகிறது. சமூக மேம்பாடு, கலை உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
சமூக மேம்பாட்டு துறைக்கான விருதை பெர்சி பர்னேவிக் பெற்றார். இவர் சுவீடன் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பண்யாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பிறகு கிராம புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
சமூக ஆர்வலர் சோகுமி வன்குங், பரதநாட்டியக் கலைஞர் பி.வி. தனஞ்சயன் மற்றும் கதக்களி கலைஞர் சாந்தா தனஞ்சயன் ஆகியோரும் இவ்விருதுகளை பெற்றுள்ளனர்












Click it and Unblock the Notifications