புயலில் கடலில் மூழ்கிய தனுஷ்கோடி கோவில் கோபுரம் வெளியே தெரிந்தது

Subscribe to Oneindia Tamil

Dhanushkodi
ராமேஸ்வரம்: கடந்த 1964ம் ஆண்டு வீசிய புயலில் அழிந்து போன தனுஷ்கோடியில் இருந்த விநாயகர் கோவிலின் கோபுரம் வெளியே தெரிந்து மீனவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென் தமிழகத்தின் முனையில் இருந்த நகரம் தனுஷ்கோடி. 1964ம் ஆண்டு வீசிய பயங்கர புயலில் தனுஷ்கோடியை கடல் கொண்டது. அங்கிருந்த அனைத்தும் கடலில் மூழ்கிப் போய் விட்டன. மிச்சங்கள் மட்டுமே தனுஷ்கோடியின் சோகத்தை வெளிப்படுத்தியபடி இன்றும் நிற்கின்றன.

இந்த நிலையில் கடலால் அடித்துச் செல்லப்பட்ட தனுஷ்கோடியில் இருந்த விநாயகர் கோவிலின் கோபுர உச்சி தற்போது வெளியில் தெரியத் தொடங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 1964ம் ஆண்டு புயலை நேரில் அனுபவித்து உயிர் மீண்ட பழம்பெரும் மீனவரான நீச்சல் காளி என்பவர் கூறுகையில்,

அப்போது வீசிய புயலின்போது 20 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனுஷ்கோடிக்குள் நுழைந்து விளையாடிய அந்த அலைகளில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்து போனது.

அப்போது நான் பலரைக் காப்பாற்றி கரை சேர்த்தேன். அங்கிருந்த விநாயகர் கோவிலும் கூட கடலில் மூழ்கிப் போனது. அன்று முதல் அது கடலுக்குள் மூழ்கியே இருந்தது. தற்போது அதன் கோபுர உச்சிவெளியில் தெரியத் தொடங்கியுள்ளது. மே 13ம் தேதி அமாவாசை நாளின்போது அதை நான் பார்த்தேன். அதன் பின்னர் சில நாட்கள் வரை தொடர்ந்து கோபுர உச்சியைக் காண முடிந்தது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+