1.78 கோடி போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்
டெல்லி: 25 மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் 1. 78 கோடி போலி குடும்ப அட்டைகளை நீக்கியுள்ளன என்று மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறியதாவது,
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய கடந்த 2006-ம் ஆண்டு 9 அம்ச செயல் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. இத்திட்டம் மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தில் அமலில் உள்ளது.
இதன் மூலம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடந்த செப்டம்பர் மாதம் வரை 1. 78 போலி குடும்ப அட்டைகளை நீக்கியுள்ளன.
உணவு மற்றும் பொது விநியோகம் குறித்த பணிக் குழு வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் பொது விநியோகத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை இறுதி செய்தல், சேமி்ப்பு வசதிகளை பெருக்குதல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்குதல் போன்றவை பற்றி ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது.
மேலும், இக்குழு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எவ்வாறு சிறப்பாக விநியோகிப்பது என்று பரிந்துரைக்க உள்ளது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications