Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று அட்சய திரிதியை- நகை வாங்க மக்கள் அலை மோதல்

Subscribe to Oneindia Tamil

Akhsaya Tritiya today
சென்னை: இன்று அட்சய திரிதியை தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நகை வாங்க மக்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அட்சய திரிதியை என்பது ஒரு சாதாரண சுப நாளாகவே இருந்து வந்தது. ஆனால் ஆடி மாதத்தை எப்படி ஜவுளிக் கடைக்காரர்கள் தள்ளுபடி விலை கொடுத்து பிரபலமாக்கி மக்களின் பர்ஸ்களை காலி செய்தனரோ, அதேபோல நகைக்கடைக்காரர்களும் அட்சய திரிதியை தினத்தை பிரபலமாக்கி மக்களின் பர்ஸ்களை மேலும் பலவீனமாக்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போது ஆண்டுதோறும் அட்சயதிரிதியை தினத்தன்று குண்டுமணித் தங்கமாவது வாங்கியாக வேண்டும் என்ற மன நிலைக்கு மக்கள் போய் விட்டனர் - விலை குண்டக்க மண்டக்க உயர்ந்திருந்தாலும்.

ஏப்ரல் 14-ந் தேதிக்கும் மே 14-ந் தேதிக்கும் இடைப்பட்ட சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3-ம் பிறை தோன்றும் நாள்தான் அட்சய திரிதியை நாள் என்று அழைக்கிறோம். இந்த நாளில் நல்ல நேரம் பார்த்து நகைவாங்கினால் மேலும் மேலும் நகை வாங்கும் வாய்ப்பும் வசதியும் பெருகும் என்பது ஐதிகம் ஆகும்.

தனலட்சுமி, ஆதிலட்சுமி உள்பட 8 லட்சுமிகளும் அடி எடுத்துவைக்கும் இந்த நாளில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முயற்சி, மற்றும் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். இந்த நாள் சக்திவாய்ந்த நாள் என்பதால் தொட்டது துலங்கம். பெண்பார்க்கும் காரியத்தில் இருந்து எந்த காரியத்தை செய்தாலும் மகத்துவம் உண்டு.

சமீப காலமாக பிரபலமடைந்துள்ள இந்த அட்சய திரிதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது. இதையடுத்து நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

இந்த ஆண்டும் முன்பதிவு செய்து மக்கள் நகை வாங்க கிளம்பியுள்ளனர். தமிழகத்தின் அனைத்து பிரபல நகைக் கடைகளும் முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி ஈர்த்துள்ளனர்.

வழக்கமாக திறக்கப்படும் நேரத்திற்கு சில மணிநேரங்கள் முன்கூட்டியே நகைக் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியுள்ளது.

நகைகளுக்கு செய் கூலி சேதாரம் கிடையாது, நகைக்கடை உரிமையாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு சலுகைளும் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த அட்சய திருதியை நாளில் இந்தியா முழுவதும் 45 டன் தங்கம் விற்பனையானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 12 டன் தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 14 டன் விற்பனையாகும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தற்போது தங்கம் விலை பெரும் உயர்வைச் சந்தித்துள்ளது. இருப்பினும் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருப்பதால் இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகைக் கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

அட்சய திருதியை அன்று நகைவாங்க உகந்த நேரம் காலை 7 மணி முதல் 9 மணிவரை, பகல் 11 மணி முதல் 12 மணிவரை, மதியம் 2 முதல் 4 மணிவரை மாலை 6 மணி முதல் 7 மணிவரை, இரவு 9 மணி முதல் 11 மணிவரை என்று தெரிவித்துள்ளனர்.

நகைக் கடைகளுக்கு நிகராக இப்போது வங்கிகளும் கூட நகை விற்பனையில் இறங்கி விட்டன. அதாவது தங்க காசுகளை வங்கிகள் விற்று அவர்களும் அட்சயதிரிதியையை கொண்டாடுகின்றனர். அது மட்டுமல்லாமல் தபால் அலுவலகங்களிலும் தங்க காசு விற்பனை ஜோராக களை கட்டியுள்ளது.

கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ஒரு பவுன் நகை ரூ.11,024-க்கு விற்பனையானது. இந்த ஆண்டு நேற்று ஒரு பவுன் நகை ரூ.13 ஆயிரத்து 568-க்கு விற்பனையானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+