தேவகோட்டை அருகே சமத்துவபுரத்தை திறந்து வைத்த ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் சிவகங்கை வந்தார். அவரை அமைச்சர்கள் பெரிய கருப்பன், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
அவர் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் காரைக்குடி நகராட்சிக்கு கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் ஒன்றரை கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்தார்.
தேவக்கோட்டை அருகே நல்லான்குடியில் புதிதாக பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. அதையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications