புளியரையில் ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு பன்றிக்காய்ச்சல் சோதனை முகாம்
புளியரை: தமிழக-கேரள எல்லையில் இருக்கும் புளியரையில் ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு பன்றிக் காய்ச்சல் தொடர்பான சோதனைகள் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து சபரி்மலைக்கு பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சென்று வருகின்றனர். நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஐயப்ப பக்தர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க புளியரையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் கலு சிவலிங்கம் உத்தரவின்பேரில் புளியரை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கனகலெட்சுமி தலைமையில் புளியரை சோதனைச்சாவடி அருகில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மலேரியா அலுவலர் ராமலிங்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் செல்லையா, சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவ குழுவினர் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கின்றனர். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications