23ல் துபாயில் 'பாரதிக்கு ஒரு பரதாஞ்சலி': கலைமாமணி ஷோபனா ரமேஷ் பரதம்
Subscribe to Oneindia Tamil

மகாகவி பாரதியார் (11.12.1882 - 11.09.1921) தமிழுக்கு ஆற்றிய சேவை மற்றும் பாரதத்தின் விடுதலைக்கு அவர் ஆற்றிய தியாகத்தை நினைவு கூறும் விதமாக பாரதிக்கு ஒரு பரதாஞ்சலி நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பரதநாட்டிய புகழ் கலைமாமணி திருமதி. ஷோபனா ரமேஷ் அவர்கள் பரதநாட்டியம் ஆடுகிறார்.
மேலும், துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் பாட்டு மற்றும் நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் சங்க பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதனை 050 5787657 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications