துபாயில் நிறுவனங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி: அல் ஜாபர் குழுமம் வெற்றி

துபாய் விளையாட்டு நகரில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த 16-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஸ்பிரைட் நிறுவன ஆதரவுடன் ஈடிஏ ஹாட்ஷாட் உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்ற சிறப்பு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
சிறப்பு இறுதிப் போட்டியில் ஈடிஏ ஹாட்ஷாட் அணி அல் ஃபுத்தைம் அணியிடம் தோற்றது. அல் ஜாபர் குழும அணி அரப்டெக் அணியினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டிகளை சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க உதவியதற்காக ஈடிஏ நலத்துறையின் காயல் முஹம்மது சுலைமான் கௌரவிக்கப்பட்டார்.
ஈடிஏ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் ஆடும் போட்டியினைக் கண்டுகளிக்க சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்தன. சுமார் 4000-க்கும் மேற்பட்டோர் போட்டியினைக் கண்டுகளித்தனர்.
விழாவில் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள், ஈடிஏ நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா, மெல்கோ நலத்துறை அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications