துபாயில் வானலை வளர்தமிழின் கவியரங்கம், சிறப்பிதழ் வெளியீட்டு விழா

இந்த நிகழ்ச்சியில் ஈடிஏ நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் அகமது முகைதீன், வழக்கறிஞர் நந்தகுமார் மற்றும் தமிழ் குடும்பம் முன்னாள் நிர்வாகி ஜெயராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக ஸ்ரீவாணி ஆனந்தன் மற்றும் ஜெயா பழனி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர்கள் அகமது முகைதீன், நந்தக்குமார், ஜெயராமன் ஆகியோருக்கு அமைப்பின் சார்பில் காவிரிமைந்தன், ஜியாவுதீன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
தொடர்ந்து "ஈரம்" இதழ் வெளியீட்டில் முதல் மூன்று பிரதிகளை அஹமது முகைதீன், வழக்கறிஞர் நந்தகுமார், ஜெயராமன் ஆகியோர் வெளியிட முறையே புதிய
உறுப்பினர்கள் சண்முகம், செந்தில், ராஜ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முதலில் பேசிய சிறப்பு விருந்தினர் ஜெயராமன், அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசியதுடன், தொடர்ந்து இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அடுத்து பேசிய அஹமது முகைதீன், ஈரம் தலைப்பை ஒட்டி தான் எழுதிய கவிதையை வாசித்துக்காட்டி கை தட்டல்களை அள்ளிச் சென்றதுடன், பி.பி. ஸ்ரீனிவாஸின் அருமையானஒரு பாடலைப் பாடி அவையோரை அசரவைத்தார்.
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் நந்தகுமார், தாய் அன்பின் ஈரத்தின் வலிமையை பற்றி பேசினார். இவர் வெளிநாட்டில் தடைசெய்யப்பட்ட கசகசா மற்றும் சில மருந்துகளைப் பற்றி அறியாத பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பொதுச்சேவை ஆற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடந்த கவியரங்கு நிகழ்ச்சிக்கு அபுதாபி கவி கலாம் மற்றும் குத்துபுதீன் ஐபக் தலைமை தாங்க, கவிஞர்கள் காவிரிமைந்தன், ஜியாவுதீன், சந்திரசேகர், முகவை முகில், ஜெயராமன் ஆனந்தி, முகவை காளிதாஸ் மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதேநிறைவுற்றது.
தொடர்ச்சியாக சென்றமாதம் இறையடி சேர்ந்த அமைப்பின் இணை செயலாளரும், தமிழ்த்தேர் இதழின் பொறுப்பாசிரியருமான ஜியாவுதீனின் தாயார் மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை ஆலோசகர் காவிரிமைந்தன் தொகுத்து வழங்க, பொது செயலாளர் சிம்மபாரதி நன்றியுரையாற்றினார்.
காவிரிமைந்தன், ஆனந்தன், சிம்மபாரதி, ஜியாவுதீன் மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் இந்த நிகழச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications