Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயில் வானலை வளர்தமிழின் கவியரங்கம், சிறப்பிதழ் வெளியீட்டு விழா

Subscribe to Oneindia Tamil

Vaanalai Valar Tamil conducted Kaviarangam in Dubai
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் தமிழ்த்தேர் இதழின் 54வது மாத இதழான “ஈரம்" சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி காலை 11 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஈடிஏ நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் அகமது முகைதீன், வழக்கறிஞர் நந்தகுமார் மற்றும் தமிழ் குடும்பம் முன்னாள் நிர்வாகி ஜெயராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் துவக்கமாக ஸ்ரீவாணி ஆனந்தன் மற்றும் ஜெயா பழனி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் வரவேற்புரையாற்றினார்.

அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர்கள் அகமது முகைதீன், நந்தக்குமார், ஜெயராமன் ஆகியோருக்கு அமைப்பின் சார்பில் காவிரிமைந்தன், ஜியாவுதீன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

தொடர்ந்து "ஈரம்" இதழ் வெளியீட்டில் முதல் மூன்று பிரதிகளை அஹமது முகைதீன், வழக்கறிஞர் நந்தகுமார், ஜெயராமன் ஆகியோர் வெளியிட முறையே புதிய
உறுப்பினர்கள் சண்முகம், செந்தில், ராஜ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

முதலில் பேசிய சிறப்பு விருந்தினர் ஜெயராமன், அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசியதுடன், தொடர்ந்து இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அடுத்து பேசிய அஹமது முகைதீன், ஈரம் தலைப்பை ஒட்டி தான் எழுதிய கவிதையை வாசித்துக்காட்டி கை தட்டல்களை அள்ளிச் சென்றதுடன், பி.பி. ஸ்ரீனிவாஸின் அருமையானஒரு பாடலைப் பாடி அவையோரை அசரவைத்தார்.

தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் நந்தகுமார், தாய் அன்பின் ஈரத்தின் வலிமையை பற்றி பேசினார். இவர் வெளிநாட்டில் தடைசெய்யப்பட்ட கசகசா மற்றும் சில மருந்துகளைப் பற்றி அறியாத பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பொதுச்சேவை ஆற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடந்த கவியரங்கு நிகழ்ச்சிக்கு அபுதாபி கவி கலாம் மற்றும் குத்துபுதீன் ஐபக் தலைமை தாங்க, கவிஞர்கள் காவிரிமைந்தன், ஜியாவுதீன், சந்திரசேகர், முகவை முகில், ஜெயராமன் ஆனந்தி, முகவை காளிதாஸ் மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதேநிறைவுற்றது.

தொடர்ச்சியாக சென்றமாதம் இறையடி சேர்ந்த அமைப்பின் இணை செயலாளரும், தமிழ்த்தேர் இதழின் பொறுப்பாசிரியருமான ஜியாவுதீனின் தாயார் மறைவிற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை ஆலோசகர் காவிரிமைந்தன் தொகுத்து வழங்க, பொது செயலாளர் சிம்மபாரதி நன்றியுரையாற்றினார்.

காவிரிமைந்தன், ஆனந்தன், சிம்மபாரதி, ஜியாவுதீன் மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் இந்த நிகழச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+