குலசேகரபட்டிணம் தசரா விழா இன்று துவக்கம்: அக்டோபர் 6ல் சூரசம்ஹாரம்

Subscribe to Oneindia Tamil

உடன்குடி: குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழா வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கிறது.

இந்தியாவி்ல் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கிறது.

இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பாட்டம் வீதி உலாவும், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பின்பு 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

இதில் அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், இணை ஆணையர் புகழேந்திரன் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன், துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விசுவகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதிகிருஷ்ணன், மகிசாசுரமர்த்தினி, அனந்த நடராஜர், கஜலெட்சுமி, கலைமகள் போன்ற திருக்கோலங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

10-ம் நாள் திருவிழாவான வருகி்ற 6-ம் தேதி இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்நது 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு முன்பு எழுந்தருளுகிறார். பின்னர் கடற்கரையில் மகிசாசுரமர்த்தினி, மகிசாசூரனை வதம் செய்யும் மகிசா சூரசம்ஹாரம் நடைபெறும். அதன் பின்னர் சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+