நெருப்பாற்றில் கரை சேர்த்தவன்
Subscribe to Oneindia Tamil
-மயூரா அகிலன்
காட்டுக்குள் காணமல் போனவளை
கண்டுபிடித்தவன் நீதான்…
எரியும் நெருப்பாற்றில்
நின்றிருந்த போது
கரம் கொடுத்து
கரை சேர்த்தாய்…..
எரிமலையின் சீற்றத்தில்
மலர்ந்தது நம் காதல்…
புயலின் பின்னணியில்
இணைந்தது நம் உறவு….
கண்ணீர் மட்டுமே
சொந்தமான எனக்கு
புன்னகையை
மாலையாக சூட்டினாய்….
பாலைவனத்தை மட்டுமே
பார்த்துப் பழகிய எனக்கு
பசும் சோலையை
பரிசளித்தவன் நீ….
முட்களில் மட்டுமே
நடந்து பழகிய என்னை
மலர்மெத்தையில்
துயில் கொள்ள வைத்தாய்….
என் மரணத் தருவாயிலும்
உன் மடியில் மட்டுமே
நான் படுத்துறங்க வேண்டும்.












Click it and Unblock the Notifications