இன்று துபாயில் இலவச சட்ட உதவி முகாம்: வழக்கறிஞர் நந்தகுமார் பங்கேற்பு
துபாய்: துபாயில் இலவச சட்ட உதவி முகாம் இன்று (29-ம் தேதி) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த சட்ட உதவி முகாமில் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். சென்னை உயர் நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருபவர் வழக்கறிஞர் வி. நந்தகுமார்.
அமீரக வாழ் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இலவச சட்ட உதவி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முகாம் குறித்து மேலும் தகவல் அறிய விரும்புபவர்கள் 050 1321722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
குறிப்பு: அபுதாபியில் சட்ட உதவி பெற விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications