களக்காடு மலைப் பகுதியில் 50 பேர் தங்கும் பிரமாண்ட குகை கண்டுபிடிப்பு
களக்காடு: களக்காடு மலையில் பிரமாண்ட குகை இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் ஒரே நேரத்தில் 50 பேர் தங்கும் இடவசதி உள்ளது.
களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டெருமைகள், மான் வகைகள், சிங்கவால் குரங்கு உளளிட்ட அரிய வகை விலங்குகள் உள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் காண்காணிக்க வனப்பகுதியில் 8 இடங்களில் டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராவில் புலிகள், சிறுத்தைகள், காட்டு பூனைகளின் படங்கள் பதிவாகியுள்ளன. இதுபோல மலை இடுக்குகளில் குகைகளும் காணப்படுகின்றன. அதில் செங்கல்தேரி மலையில் காணப்படும் குகை பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடல மட்டத்தில் இருந்து 1000 அடி உயரம் கொண்ட செங்கல்தேரி பள்ளத்தாக்கில் இருந்து 3 கிமீ தொலைவில் கருமண்டி அம்மன் கோவில் உள்ளது. கோவில் அருகே பெரிய பாறை உள்ளது.
பாறை இடுக்கின் வழியாக உள்ளே சென்றால் பிரமாண்ட குகை உள்ளது. குகையின் உள்பகுதி வீடுகளைப் போல நீளமாகவும், அகலமாகவும் உள்ளது. ஒரே நேரத்தில் 50 பேர் வரை தங்கும் வகையில் இடவசதி உள்ளது. மழை பெய்தால் கூட தண்ணீர் துளிகள் குகைக்குள் விழுவதில்லை. குகையின் நுழைவு வாயில் சிறியதாக இருப்பதால் குனிந்து தான் செல்ல முடியும். முன் காலத்தில் இதுபோன்ற குகைக்குளில் சித்தர்கள் தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications