துபாயில் நடந்த இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

நிகழ்ச்சியின் துவக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார். கோட்டாறு சாதிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் தலைமை தாங்கினார். ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, கீழை அப்துல் கஃபூர், சுல்தான் காக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெங்களூரு தாருல் உலூம் ஸபீலுர் ரஷாதி அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி முஃப்தி ஏ. சைபுதீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்கள் கேட்ட இஸ்லாமிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அடமங்குடி அப்துல் ரஹ்மான், ஆவடி பீர் முஹம்மது ஆகியோர் நபி புகழ் பாடினர்.
சித்தையன்கோட்டை மௌலவி அல்ஹாபிழ் காரி முஹம்மது ஆதம் ரஷாதி அவர்களது துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோட்டாறு சாதிக் தலைமையில் ஜிஃப்ரி, முதுவை அஹமது அனஸ் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications