துபாய் ஈடிஏ எம்பிஎம் ஊழியர்களால் கலகலப்பான கிரீக் பார்க்
Subscribe to Oneindia Tamil

துபாய் ஈடிஏ எம்.பி.எம். நிறுவன ஊழியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி துபாய் கிரீக் பூங்காவில் சிறப்பாக நடந்தது. அப்போது அனுபவமிக்க வித்தைக்காரர்களால் மேஜிக் ஷோ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
மேலும் ஊழியர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறுவனத்தின் பொது மேலாளர் பி.எம். எஸ். ஹமீத் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இது போன்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்திற்கு ஊழியர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நலத்துறையின் சார்பில் நலத்துறை அலுவலர் பாலரசு உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications