திருச்செந்தூரில் நாளை தைப்பூசத் திருவிழா: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா கோலாகலமாக நடக்கவிருக்கின்றது. இதை முன்னிட்டு பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. காலை 8 மணிக்கு அஸ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
உச்சிகால தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகாத்த பெருமாள் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தை அடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள்மாட வீதிகளில் உலா வந்து கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தைப்பூசத்தை முன்னி்ட்டு நெல்லை, பாபநாசம், விகேபுரம், பாவூர்சத்திரம், தூத்துக்குடி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அழகு குத்தியும், காவடி ஏந்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications