நாளை துபாயில் வானலை வளர்தமிழின் இலக்கிய கூட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் இலக்கிய கூட்டம் நாளை (09.03.2012) காலை 10.00 மணிக்கு துபாய் கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் நடக்கிறது.
அப்போது தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக ‘மனசு’ மற்றும் ‘ஆற்றல்’ ’ ஆகிய இதழ்கள் வெளியிடப்பட விருக்கின்றன. இந்த தகவலை அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார்.
கீழக்கரை கவிஞர் நாசர் சுயபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மேலும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவிருக்கிறது.
கவிதை எழுத விருப்பம் உள்ளவர்கள், படைப்பாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 5993120 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications