ரூ.100 கோடியில், 222 அடியில் பீகாரில் உலகின் மிகப்பெரிய கோவில் கட்டப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

Angkorwatt Temple
பாட்னா: தற்போது உலகின் மிகப் பெரிய இந்து கோவிலாக உள்ள கம்போடியாவின் அங்கோர் வாட்டை மிஞ்சும் வகையில் அதை விட பெரிய கோவிலை பீகாரில் கட்டுகின்றனர்.

12வது நூற்றாண்டில் கம்போடியாவில் கட்டப்பட்டது இந்த அங்கோர் வாட் கோவில். தற்போது இதை விட பெரிதாக கட்டப்படும் கோவில், பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் கட்டுகின்றனர்.

இது குறித்து பீகார் மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் செயலாளரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ஆச்சார்யா கிஷோர் குணால் கூறியதாவது,

இஸ்மாயில்பூர் அருகே...

இந்த புதிய கோவில் 15 ஏக்கர் நிலத்தில் ரூ.100 கோடி செலவில் கட்டப்படுகிறது. 222 அடி உயரத்திற்கு கட்டப்படும் இது 5 அடுக்குகளை கொண்டதாக இருக்கும். இது ஹாஜிபூர்-பிடுபூர் ரோட்டில் உள்ள இஸ்மாயில்பூர் கிராமம் அருகே உள்ள இடத்தில் கட்டப்படுகிறது. கோவில் அமையும் இடத்திற்கு அங்கோர் நகர் என்று பெயரிடப்படுகிறது.

இதற்காக உள்ளூர்வாசிகளிடம் இருந்து சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள நிலம் வாங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு விராத் அங்கோர் வாட் ராம் மந்திர் என்று பெயரிடப்படும். இந்த கோவிலில் ராதா-கிருஷ்ணா, சிவன்-பார்வதி, கணேஷ், சூர்யா, விஷ்ணு மற்றும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் சிலைகள் ஆகியவை வைக்கப்படும். இதை கட்டி முடிக்க 5 ஆண்டுகளும், அழகுபடுத்த மேலும் 5 ஆண்டுகளும் ஆகும்.

இந்த கோவிலுக்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமத்திற்கு ராமர், லக்ஷ்மணர் மற்றும் விஸ்வாமித்திரர் ஆகியோர் வந்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. பீகார் மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த கோவில் கட்டப்படுகிறது என்றார்.

12வது நூற்றாண்டில் கம்போடிய மன்னர் சூர்யவர்மன் கட்டிய அங்கோர் வாட் தான் இது வரை உலகின் மிகப் பெரிய இந்து கோவிலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+