சென்னையில் அரங்கேற்றம் நடத்திய துபாய் பள்ளி மாணவி
சென்னை: துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு. விஜயேந்திரன் அவர்களின் மகள் செல்வி. காவியாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 17ம் தேதி தி.நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயா கலையரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர். விஸ்வநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விஸ்வநாதன் அவர்கள் காவியாவின் குடும்பத்தினருடன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கியும் வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காவியாவின் நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நிகழ்ச்சியின் அங்கமாக, குச்சுப்புடி நடனத்தின் பாடல்களுக்கும் அவர் திறம்பட நடனமாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். நடனங்களின் இடைப்பட்ட நேரத்தில் திரு. விஜயேந்திரன் "கண்ணால் காண்பதும் பொய்" என்ற அறிவியல் நிகழ்ச்சியை நடத்தினார்.

நிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவன புரவலர் திரு. லியாகத் அலி, மற்றும் பொழுது போக்கு துறை செயலாளர். திரு. முகமது தாஹா, பொக்கிழதாரர். திரு.கீதா கிருஷ்ணன், மற்றும் இணை. பொக்கிழதாரர். திரு.சுந்தர்ராஜன் தன குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
வழக்கறிஞர் திருமதி. எழில் கரோலீனுக்கு திருமதி. எழிலரசி விஜயேந்திரன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். அவரும் காவியாவிற்கு பொன்னாடை அணிவித்து ஆசீர்வாதம் செய்தார்.
விழா மேடையில் திரு. விஸ்வநாதன், திரு. லியாகத் அலி, மற்றும் அண்ணா பல்கலைக்கழக அச்சுத்துறை முன்னாள் தலைவர் திருமதி. டாக்டர். லலிதா ஜெயராமன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரின் சிறப்பு பேச்சும் இடம்பெற்றது.
வசிக்கும் தேசம் அயல் தேசமானாலும், தமிழ்க்கலாச்சரம் மாறாமல் பரதநாட்டியத்தை கற்று அரங்கேற்றிய காவியாவையும், அவர்களின் பெற்றோரையும், நடன குரு. திருமதி. கவிதா பிரசன்னா அவர்களையும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர்.
நடன உடை மாற்றும் இடைப்பட்ட நேரத்தில் செல்வன். ப்ரீதம் விஜயேந்திரனின் பாட்டும், பின்னர் ப்ரீதம் விஜயேந்திரனுடன் சேர்ந்து செல்வன். ஹரிஷ் சிவகுமார், செல்வன். கௌஷிக் ஜெயகுமார் "அபாகஸ் " என்னும் மனக்கணித செயல்முறையை செய்து காண்பித்தனர். பின்னர், செல்வி. ஷிவானி சிவகுமாரின் பாரதியார் பாடல்கள் அனைவரையும் மெய் மறக்க செய்தது. செல்வி. தேவதர்ஷினி கெளரிசங்கரின் நடனம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. செல்வன். யாஷிஷ் கெளரிசங்கரின் கராத்தே செயல்முறை விளக்கமும் சிறப்புற நடந்தது.
நிகழ்ச்சியை. திரு. அருன்பாபா கணேசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் குரு. திருமதி. கவிதா பிரசன்னா, பாடல் பாடிய திருமதி. வசந்தா சங்கர்ராம், மிருதங்கம் வாசித்த திரு. சங்கரராமன், வயலின் வாசித்த செல்வி. நந்தினி, மற்றும் புல்லாங்குழல் வாசித்த திரு.சாய் நரசிம்மன் அவர்களுக்கு காவியா தன் பெற்றோருடன் சேர்ந்து மரியாதை செய்தார்.
மாலை 6.00 மணி அளவில் துவங்கிய நிகழ்ச்சி நண்பர்கள், உறவினர்களின் ஆசியுடன், இரவு உணவுடன் 9 மணி அளவில் நிறைவுபெற்றது.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications