துபாய், அபுதாபியில் நாளை இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் 67வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் 15.08.2013 அன்று காலை 7.50 மணி முதல் இந்திய கன்சுலேட்டில் நடைபெற இருக்கிறது.
காலை 8 மணிக்கு இந்திய தேசியக் கொடி ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என இந்திய கன்சுலேட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அபுதாபி:
அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்திலும் இந்திய சுதந்திர தினம் சிறப்புற கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு இந்திய தேசிய கொடி ஏற்றப்படும்.
அமீரகத்தில் உள்ள இந்தியப் பள்ளிகள், இந்திய சங்கங்கள் உள்ளிட்டவற்றிலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications