அருள்மிகு கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா 12ம் தேதி துவக்கம்
கரூர்: அருள்மிரு கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வரும் 12ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்களில் கரூர் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் வரும் 12ம் தேதி மாலை கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி பெருவிழா துவங்குகிறது.
மே 17ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கரூரின் முக்கிய நகரங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பூ அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வரும். இவ்வாறு வரும் வாகனங்கள் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் நிறைவடையும்.
மே 26ம் தேதி நள்ளிரவு எதிர்காப்பு நிகழ்ச்சி நடைபெறும். மே 27, 28 ஆகிய தேதிகளில் அக்னிசட்டி, அலகு காவடிகள் நிகழ்ச்சி நடைபெறும். மே 29ம் தேதி மாலை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு வரும் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.












Click it and Unblock the Notifications