துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் நடந்த புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி நேற்று இரவு துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஈமான் அமைப்பின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.
முன்னதாக அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார்.
தினமும் சிறப்புற தராவீஹ் தொழுகை நடத்திய பள்ளி இமாம் முஹம்மதுவுக்கு ஈமான் அமைப்பின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புனித லைலத்துல் இரவின் சிறப்பியல்புகளை அரபு மொழியில் விவரித்தார்.
முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப் புனித லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகளை தமிழில் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கோட்டாறு சாதிக் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். நிகழ்வினைத் தொடர்ந்து தஸ்பீஹ் நபில் தொழுகையினை மௌலவி சாதிக் நடத்தினார்.
விழாக்குழு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றி கூறினார். சென்னை பிலால் ரெஸ்டாரென்ட் வழங்கிய சஹர் உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை விழாக்குழு இணைச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், படேஷா பஷீர், இல்யாஸ், வி களத்தூர் ஷர்புதீன், கும்பகோணம் சாதிக், உஸ்மான், அலி, நஜுமுதீன், சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார், அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.